வெறும் உள்ளாடையுடன் ஓடும் ரயிலில் உலாவிய பீகார் எம்.எல்.ஏ

வெறும் உள்ளாடையுடன் ஓடும் ரயிலில் உலாவிய பீகார் எம்.எல்.ஏ
வெறும் உள்ளாடையுடன் ஓடும் ரயிலில் உலாவிய பீகார் எம்.எல்.ஏ

ஓடும் ரயிலில் பீகார் மாநில சட்டப்பேரவை உறுப்பினரான கோபால் மண்டல், வெறும் உள்ளாடையுடன் பயணித்தது சர்ச்சையான நிலையில், அதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். இவர் அந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சார்ந்தவர். இது அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியாகும். 

வியாழன் அன்று ஓடும் ரயிலில் எம்.எல்.ஏ கோபால் மண்டல் வெறும் உள்ளாடையுடன் ரயிலுக்குள் உலாவியதாக அவருடன் பயணித்த சக பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக பயணிகள் சிலருக்கும், எம்.எல்.ஏ தரப்புக்கும் வாக்கு வாதம் கூட நடந்துள்ளது. எம்.எல்.ஏ உள்ளாடையுடன் நிற்கும் படம் வெளியாகி இருந்தது.

ரயிலில் பயணித்த போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் தலையிட்டு சமாதானம் செய்துள்ளனர். இதனை ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரியும் உறுதி செய்துள்ளார். பாட்னாவில் இருந்து புது டெல்லிக்கு தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி கம்பார்ட்மெண்டில் அவர் பயணித்துள்ளார். 

“நான் பயணத்தின்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தது உண்மை தான். ரயிலில் ஏறியதும் எனக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. அதனால் மேல் ஆடைகளை துறந்தேன். நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை. 

கழிவறைக்கு செல்லும் வழியில் பயணி ஒருவர் என்னை தடுத்தார். அவசரம் காரணமாக அவரது தடையை தகர்த்தேன். பின் நான் மீண்டும் எனது இருக்கையை நோக்கி வந்தபோது அவர் கேள்வி எழுப்பினார். பெண் பயணிகளே இல்லாத இடத்தில் எப்படி பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என்றார் அவர். எனக்கு 60 வயதாகிறது” என எம்.எல்.ஏ விளக்கம் கொடுத்துள்ளார். 

இது அரசியல் ரீதியாக பீகார் மாநில அளவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com