பீகார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி கொரோனாவுக்கு உயிரிழப்பு

பீகார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி கொரோனாவுக்கு உயிரிழப்பு
பீகார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி கொரோனாவுக்கு உயிரிழப்பு

பீகார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினருமான மேவலால் சவுத்ரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது  68. கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகாரில் உள்ள தாராபூர் தொகுதியின் எம்.எல்.ஏ அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பீகாரில் மொத்தமாக 3,24,117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் 44700 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிறு அன்று மட்டும் புதிதாக 8690 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com