மூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை

மூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை
மூளை காய்ச்சல் சிகிச்சைக்கு ரூ100 கோடி நிதி - மத்திய அரசுக்கு பீகார் கோரிக்கை

பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அங்கு 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அரசு மருத்துவமனைக்கு சென்று நோயை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் மத்திய சுகாதரத்துறை கூடுதல் செயலாளர் மனோஜ் ஜலானி தலைமையிலான குழுவினரும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். மேலும் இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளுக்கு நாள் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்‌. மேலும் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com