24 மணி நேரத்தில் 19 பேரணிகள்; பீகாரில் தேஜஷ்வி யாதவ் சாதனை
இளம் தலைவரான தேஜஷ்வி யாதவ் தனது தந்தை லாலு பிரசாத்தின் சாதனையை முறியடித்துள்ளார். லாலு ஒரே நாளில் 16 பேரணிகளை நடத்திய பெருமைக்குரியவர்.
இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் நேற்று ஒரே நாளில் 19 பேரணிகளை நடத்தி பீகாரில் சாதனை படைத்தார். 31 வயதான இளம் தலைவரான தேஜஷ்வி யாதவ் தனது தந்தை லாலு பிரசாத்தின் சாதனையை முறியடித்தார். அவர் ஒரே நாளில் 16 பேரணிகளை நடத்திய பெருமைக்குரியவர்.
நவம்பர் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ள பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பேரணிகளில் அவர் உரையாற்றினார். தேஜஷ்வி யாதவ் தனியாளாக நின்று பெரும் கூட்டத்தை கூட்டி வருகிறார். இது மாநிலத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு கவலை அளித்துள்ளது. தேஜஷ்வி யாதவின் பேரணிகளில் வலிமையைக் காண்பிப்பதில் அவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியை ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் ஆறு பேரணிகளில் உரையாற்ற மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.