”என் தந்தையே என்னை பாலியல் வன்கொடுமை செய்கிறார்” - வீடியோ எடுத்து நியாயம் கேட்ட மகள்!

”என் தந்தையே என்னை பாலியல் வன்கொடுமை செய்கிறார்” - வீடியோ எடுத்து நியாயம் கேட்ட மகள்!
”என் தந்தையே என்னை பாலியல் வன்கொடுமை செய்கிறார்” - வீடியோ எடுத்து நியாயம் கேட்ட மகள்!

பீகார் மாநிலத்தில் தன்னுடைய தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை படம்பிடித்து, நீதி கேட்டு சமூக வலைதளங்களில் 18 வயதே ஆன இளம் பெண் பகிர்ந்துள்ள் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள ரோசெராவில் வசித்து வரும் 50 வயது மிக்கவர், ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது 18 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதை வெளியில் சொல்லக்கூடாது எனக்கூறி மகளை மிரட்டியும் துன்புறுத்தியும் அவர் வந்துள்ளார். தனக்கு நிகழும் துன்பத்தை வெளியில் கூட சொல்ல முடியாத நிலையில் தவித்து வந்துள்ளார் அவர். இதையடுத்து இந்த அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டுவர மகள் முடிவு செய்தாள்.

தன் தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதை மறைத்து வைக்கப்பட்ட கேமராவில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றி தனக்கு உதவுமாறு வேண்டுகோள் வைத்தார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன இணையவாசிகள் காவல்துறை கவனத்திற்கு இச்சம்பவத்தை கொண்டு சென்றனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தையை கைது செய்தனர். “வைரலான வீடியோவில் பாதிக்கப்பட்டவரை தாக்கும் தந்தையை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேறு யாருக்கும் இந்த குற்றத்தில் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்” என்று டிஎஸ்பி சாஹியர் அக்தர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தன் மகள் மீது நிகழ்த்தப்பட்ட தொடர் பாலியல் வன்கொடுமையை எதிர்க்கவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து அமைதியாக இருக்குமாறு அவரது தாய் மாமா அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com