”பிரதமர் மோடி அப்படி என்னத்த பண்ணிட்டாருனு அவர அப்டி சொல்றீங்க” - பீகார் முதல்வர் காட்டம்!

”பிரதமர் மோடி அப்படி என்னத்த பண்ணிட்டாருனு அவர அப்டி சொல்றீங்க” - பீகார் முதல்வர் காட்டம்!
”பிரதமர் மோடி அப்படி என்னத்த பண்ணிட்டாருனு அவர அப்டி சொல்றீங்க” - பீகார் முதல்வர் காட்டம்!
Published on

புதிய இந்தியாவின் தந்தை என பிரதமர் மோடியை சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பி அரசியல் உலகில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ள நிதிஷ் குமார், தேசத் தந்தையைச் சுட்டுக்கொன்ற குற்றவாளியைக் கொண்டாடும் அமைப்புகளாகத்தான் அவை இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருத்தா, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்றும், புதிய இந்தியாவின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி என்றும் அண்மையில் குறிப்பிட்டதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com