பீகார்: கால்நடைகளைத் திருடியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கொலை

பீகார்: கால்நடைகளைத் திருடியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கொலை
பீகார்: கால்நடைகளைத் திருடியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கொலை

பீகாரின் கட்கமா கிராமத்தில், கால்நடைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் மூவரை கட்டிவைத்து கொடூரமாக தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பீகாரின் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமையைக் குறிக்கும் மற்றொரு சம்பவமாக, கால்நடைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  பூர்னியா மாவட்டத்தில் கிருத்யானந்த் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்கமா கிராமத்தில் நேற்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர் சுமார் 36 வயதான ஷியமானந்த் யாதவ் எனவும், காயமடைந்தவர்கள் 40 வயது மனோஜ் யாதவ் மற்றும் 25 வயதான கைலாஷ் சா ஆகியோர் என்றும் பூர்ணியா சதர் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேந்திர தாஸ் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com