பால் வியாபாரத்திற்காக ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்

பால் வியாபாரத்திற்காக ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்

பால் வியாபாரத்திற்காக ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்
Published on

பால் வியாபாரத்திற்காக சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் விவசாயி ஒருவர்!

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் போயர். இவர் விவசாயம் மற்றும் பால் வியாபாரம் பார்த்து வருகிறார். பால் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி வெளியூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால் தனக்கென ஒரு ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்தார். இவருக்கு பால் வியாபாரம் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்ததால் இவர் பஞ்சாப், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்நிலையில் ஜனார்த்தனன் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தனது வீட்டின் அருகே ஹெலிகாப்டருக்காக ஹெலிபேட் கட்டியுள்ளார். மேலும் பைலட் அறை, தொழில்நுட்ப அறை ஆகியவையும் தயார் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் ஹெலிகாப்டர் ஜனார்த்தனனிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தனக்கு 2.5 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருப்பதால் அங்கே ஹெலிபேட், பார் உள்ளிட்ட பல்வேறு வசிதகளை உருவாக்கிக் கொள்ளஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பியாண்டி நகர் முக்கிய தொழிலதிபர்களை கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு நாட்டில் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் குடோன்கள் இருப்பதால் இது செல்வ செழிப்பான பகுதியாக கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் காடிலாக் கார் முதன்முதலில் பிவாண்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், ஜனார்த்தனன் தற்போது தனது பால் வியாபாரத்திற்காக ஹெலிகாப்டர் வாங்கியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com