ஆண்டுக்கு கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்: பாரத் பயோடெக் அறிவிப்பு

ஆண்டுக்கு கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்: பாரத் பயோடெக் அறிவிப்பு

ஆண்டுக்கு கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்: பாரத் பயோடெக் அறிவிப்பு
Published on

ஆண்டுக்கு கூடுதலாக 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதரபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆருடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வரில் உள்ள ஆலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆலையில், கூடுதலாக ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com