கோவாக்சின் பார்முலாவை மற்ற உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் தயார்: அரசு

கோவாக்சின் பார்முலாவை மற்ற உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் தயார்: அரசு
கோவாக்சின் பார்முலாவை மற்ற உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் தயார்: அரசு

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பார்முலாவை மற்ற உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாராக உள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறுகையில், "பிற நிறுவனங்களும் கோவாக்சின் தடுப்பூசியினை உற்பத்தி செய்யவேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். கோவாக்சின் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் இதை வரவேற்றுள்ளது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். தடுப்பூசி தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு நாங்கள் ஒரு வெளிப்படையான அழைப்பை வழங்குகிறோம். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் உதவும்" என்று அவர்  கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com