\
டெல்லி: அமைதியான முறையில் பாரத் பந்த் நிறைவு!

டெல்லி: அமைதியான முறையில் பாரத் பந்த் நிறைவு!

டெல்லி: அமைதியான முறையில் பாரத் பந்த் நிறைவு!
Published on

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெற்றது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளும் இந்த அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகள் சாலையில் அமர்ந்து அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நிறைவடைந்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com