கடந்த 7ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த ஆண்டுக்கான தசரா விழா வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த தசரா விழாவை கண்டுகளிக்க கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக நடைபெறும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.