பெங்களூரு: நர்சிங் மாணவி கொலை... சக மாணவர் கைது

பெங்களூரு: நர்சிங் மாணவி கொலை... சக மாணவர் கைது
பெங்களூரு: நர்சிங் மாணவி கொலை... சக மாணவர் கைது

பெங்களூருவில் 20 வயது நர்சிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஒருவர் நர்சிங் படிப்பிற்காக பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தார். இம்மாணவி அதே கல்லூரியில் பயிலும் 21 வயதான அனிசூர் ரஹ்மான் என்ற மாணவர் மூலமாகவே கடந்த திங்கட்கிழமை அக்கல்லூரியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் முன்பே நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில்  நேற்று புதன்கிழமை காலை 10:30 மணியளவில் அந்த மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில், இறந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  

இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாணவி மரணம் தொடர்பாக அனிசூர் ரஹ்மானை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.  விசாரணையில் மாணவியும் தானும் ஒருவருக்கொருவர் விரும்பியே உடலுறவில் ஈடுபட்டதாகவும், அப்போது திடீரென்று அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்தாகவும் அனிசூர் ரஹ்மான் கூறினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் உடலில் எந்தவிதமான போராட்ட அடையாளங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் எனக் கூறினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com