ஐ.எஸ்., தீவிரவாதிகளுக்கு ‘ஆப்’ உருவாக்கிய மருத்துவர் கைது!

ஐ.எஸ்., தீவிரவாதிகளுக்கு ‘ஆப்’ உருவாக்கிய மருத்துவர் கைது!

ஐ.எஸ்., தீவிரவாதிகளுக்கு ‘ஆப்’ உருவாக்கிய மருத்துவர் கைது!
Published on

காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய வகையில் 'மெடிக்கல் ஆப்' ஒன்றை உருவாக்கிய பெங்களூருவைச் சேர்ந்த கண் மருத்துவரை கைது செய்துள்ளது என்ஐஏ.

கடந்த மார்ச் மாதம் டெல்லியின் ஜாமியா நகரில் வசிக்கும் ஜஹான்சாகிப் சாமி வானி மற்றும் ஹீனா பஷீர் பேஹ் என்ற தம்பதியினர், ஐ.எஸ்.ஐ.எஸ்., துணை அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.

இத்தம்பதிகளுடன் தொடர்பிலிருந்ததாக பெங்களூரு பசவன்குடியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்ற 28 வயதான கண் மருத்துவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவராக பணியாற்றி வரும் அப்துர் ரஹ்மான், காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு உதவ மருத்துவ செயலி ஒன்றையும், ஆயுதம் தொடர்பான செயலியையும் உருவாக்கி வந்துள்ளார்.

மேலும் 2014-ம் ஆண்டு சிரியாவில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மருத்துவ முகாமிற்கு சென்று சிகிச்சை அளித்துள்ளார். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் இந்தியா திரும்பியுள்ளார். இத்தகவலை என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com