\
’பர்த் டே பார்ட்டி’யில் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பியூட்டிஷியன்

’பர்த் டே பார்ட்டி’யில் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பியூட்டிஷியன்

’பர்த் டே பார்ட்டி’யில் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பியூட்டிஷியன்
Published on

அழகுக்கலை தொழிலில் பணிபுரியும் பெண் ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிரயகராஜ் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் அழகுக்கலை பணி செய்து வருகிறார். இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்றுகொண்டிருந்தபோது, அப்பெண்ணை நண்பர்கள் சிலர் வற்புறுத்தி மது அருந்த வைத்துள்ளனர்.

பின்னர் அப்பெண்ணை நண்பர்கள் சிலர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தூமன்கஞ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் தலைமறைவாகியுள்ளதால், போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com