இது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் பிபிசியின் செய்தி வெளியீடு சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது . நாங்கள் எங்கள் ஊழியரை ஆதரிக்கிறோம்.அவர்களில் சிலர் நீண்ட கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர் அல்லது இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மேலும் ஊழியர்களின் நலனே எங்கள் முன்னுரிமை. இந்தியாவில் பிபிசியின் செய்தி வெளியீடு சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பாகும், நாங்கள் எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம், அவர்கள் அச்சமின்றி அல்லது ஆதரவின்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடுவர் என்று பிபிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது