பெங்களூரூ: பள்ளி வளாகம் மற்றும் சாலையில் 'Sorry' என்று எழுதியது யார்? போலீசார் விசாரணை

பெங்களூரூ: பள்ளி வளாகம் மற்றும் சாலையில் 'Sorry' என்று எழுதியது யார்? போலீசார் விசாரணை
பெங்களூரூ: பள்ளி வளாகம் மற்றும் சாலையில் 'Sorry' என்று எழுதியது யார்? போலீசார் விசாரணை

பெங்களூருவில் பள்ளி மற்றும் சாலையில் சாரி என்ற வாசகத்தை எழுதிய மர்ம நபர்கள் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூருவில் காமக்ஷிபல்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்திதாமா தனியார் பள்ளியின் நுழைவாயில், சுவர்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் சாரி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இதைக் கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், டெலிவரி பாய்ஸ் வேடத்தில் வந்த மர்மநபர்கள் நள்ளிரவில் இதை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com