பத்ரிநாத் கோயில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

பத்ரிநாத் கோயில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு
பத்ரிநாத் கோயில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

பனிப்பொழிவு காரணமாக, பத்ரிநாத் கோவில் முழுவதும் வெள்ளிப்பனிமலைப்போல் காட்சி அளிக்கிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், அங்குள்ள வீடுகளில் பனி முழுவதும் மூடி உள்ளது. பத்ரிநாத் கோவிலும் பனியால் சூழப்பட்டிருக்கிறது.

கோவிலுக்குச் செல்வதற்கான சாலைகளிலும் பனி படர்ந்து காணப்படுவதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com