இந்தியா
கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி
கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாட்டில்களை கைப்பற்றி அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப pவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.