அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிறைவு... குழந்தை ராமரின் கண்கள் திறக்கப்பட்டன

அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.

அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டைக்காக, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருள்களுடன் வந்தார். பிறகு சாஸ்திரிகள் இவருக்கு சங்கல்பம் செய்து வைக்க, வைபவமானது தொடங்கியது. இவரின் அருகில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் அமர்ந்தார்.

அயோத்தி ராமர்
அயோத்தி ராமர்புதிய தலைமுறை

முன்னதாக இவ்வைபவத்திற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதமிருந்து ராமேஸ்வரம் சென்று அங்கு ராமநாதசுவாமியை தரிசனம் செய்ததுடன், புனித நீரை எடுத்து அயோத்தி சென்றார். அப்புனித நீரைக்கொண்டு அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்ற விக்ரஹத்திற்கு அபிஷேகம் செய்தனர்.

அயோத்தி ராமர்
அயோத்தி ராமர்புதிய தலைமுறை

பிறகு வேத மந்திரங்கள் ஓத ராமர் சிலையில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. பிறகு தாமரை மலரைக்கொண்டு பிரதமர் பிராண பிரதிஷ்டை செய்தார். அச்சமயம் ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com