இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமைகள் - அதிர்ச்சி புள்ளிவிவரம்.!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமைகள் - அதிர்ச்சி புள்ளிவிவரம்.!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமைகள் - அதிர்ச்சி புள்ளிவிவரம்.!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 7% உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. 

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாளொன்றுக்கு சாராசரியாக 87 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும்.

இதில் பெரும்பாலான குற்றங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் மூலம் அரங்கேறுவது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் 4.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com