புதிய ரூ.200 நோட்டுகள் ஏடிஎம்-ல் எப்போது கிடைக்கும்?

புதிய ரூ.200 நோட்டுகள் ஏடிஎம்-ல் எப்போது கிடைக்கும்?
புதிய ரூ.200 நோட்டுகள் ஏடிஎம்-ல் எப்போது கிடைக்கும்?

புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற திங்கட்கிழமை முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நேற்றுமுதல் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது புழக்கத்துக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறும்போது, ’சென்னை ரிசர்வ் வங்கிக்கு புதிய ரூ.200 நோட்டுகள் வந்துவிட்டது. விடுமுறை காரணமாக வங்கிகளுக்கு பிரித்து கொடுக்க முடியவில்லை. திங்கட்கிழமை முதல் பிரித்து கொடுக்க இருக்கிறோம். ஏடிஎம்-ல் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைப்பதற்கு சற்று காலதாமதமாகும். ஏனென்றால் ஏடிஎம். இயந்திரத்தில் இதற்கென சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது’ என்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com