தனியார் வங்கி ஏடிஎம்-ல் சில்ரன்ஸ் பேங்க் நோட்டுகள்!

தனியார் வங்கி ஏடிஎம்-ல் சில்ரன்ஸ் பேங்க் நோட்டுகள்!
தனியார் வங்கி ஏடிஎம்-ல் சில்ரன்ஸ் பேங்க் நோட்டுகள்!

உத்தரபிரதேசத்தில் ஏடிஎம் ஒன்றில் போலி ரூபாய் நோட்டுகள் வந்ததால் மக்கள் அதிர்ச்சியை அடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் வங்கி ஏடிஎம்ல் போலி ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் மார்பிள் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த சச்சின் என்பவர், ஏடிஎம்மில் வந்த நோட்டு ஒன்றில் சில்ரன்ஸ் பாங்க் என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஏடிஎம் காவலாளியிடம் புகார் தெரிவித்தார். 

இதையடுத்து காவலாளி புகார் நோட்டில் விவரங்களை பதிவு செய்துகொண்டார். இதே போன்று வேறு சிலருக்கும் சில்ரன்ஸ் வங்கி என்று அச்சிடப்பட்ட நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைத்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை வேறு நோட்டு வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் ஏடிஎம்மில் இந்த நோட்டுகள் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com