பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது 

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போவன் பகுதியிலிருந்து ராம்நகர் என்ற பகுதிக்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்றதே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதேபோல் காயமைடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திராசிங் அறிவித்துள்ளார்


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com