இமாச்சலப் பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசம்:  நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னாரில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மலையை ஒட்டிய பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அச்சுறுத்தும் படக்காட்சிகளும் வெளியாகியள்ளன. மலையின் மீதிருந்து சில கற்கள் உருண்டு கீழே விழும் நிலையில் அடுத்த சில நிமிடங்களில் மலையிலிருந்து மண் பாளம்பாளமாக விழுகிறது. மலையை ஒட்டி வாகனத்தில் இருந்த 8 பேரும் இந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
இது தவிர மேலும் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 25 முதல் 30 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com