உத்தராகண்ட், கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. உத்தராகண்டின் சம்பாவத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். கேரளாவில் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.