அசாம்: மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் கடத்தல்

அசாம்: மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் கடத்தல்
அசாம்: மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் கடத்தல்

அசாமில் சிவசாகர் மாவட்டத்தின் மூன்று ஓஎன்ஜிசி ஊழியர்கள், அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டனர்.

இன்று அதிகாலையில் 3 .என்.ஜி.சி ஊழியர்கள், அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். சிவசாகர் மாவட்டத்தின் லக்வா துறையில் உள்ள .என்.ஜி.சியின் ரிக் தளத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளது.

ஓஎன்ஜிசி ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்துடன் இந்த கடத்தல் நடந்துள்ளது, அதன்பின்னர் அசாம்-நாகலாந்து எல்லையில் உள்ள நிமோநகர்க் பகுதியில் அவர்களின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கடத்தப்பட்டது தொடர்வாக காவல்துறை தீவிரமான விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com