நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி: இளம் பெண் தற்கொலை!

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி: இளம் பெண் தற்கொலை!

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி: இளம் பெண் தற்கொலை!
Published on

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால், விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை ஓஷிவாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது அம்மாவுடன் வசித்துவந்தவர், 20 வயது இளம் பெண், பேர்ள் பஞ்சாபி. இந்திப் படங்களில் முயற்சி செய்துகொண்டிருந்தார். பல நிறுவனங்களுக்கு அலைந்து வாய்ப்புத் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தனது அம்மாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி கூறும்போது, ‘இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஏதோ சத்தம் கேட்டதால், சென்று பார்த்தேன். அவர் வசிக்கும் மூன்றாவது மாடியில் ஏதோ சத்தம் கேட்டது. பின்னர் அவர் கீழே விழுந்துகிடந்தார்’ என்றார்.

பேர்ள், இதற்கு முன்பும் சில முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com