எல்லை தாண்டினால்..? அஸ்வினின் ’மன்கட்’-டை கையில் எடுத்த கொல்கத்தா போலீஸ்!

எல்லை தாண்டினால்..? அஸ்வினின் ’மன்கட்’-டை கையில் எடுத்த கொல்கத்தா போலீஸ்!

எல்லை தாண்டினால்..? அஸ்வினின் ’மன்கட்’-டை கையில் எடுத்த கொல்கத்தா போலீஸ்!
Published on

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் செய்த மன்கட் அவுட் முறையை, கொல்கத்தா போக்குவரத்து போலீஸ் விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது, அஸ்வின் செய்த 'மன்கட்' முறை அவுட். சமூக வலை தளங்களில் இது பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

விதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும் விதியே சரி எனும்போது தவறில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது விவாதங்கள்.

இந்நிலையில் இந்த அவுட் முறையை தங்களது போக்குவரத்து விதிமீறல் எச்சரிக்கைக்குப் பயன்படுத்தி இருக்கிறது கொல்கத்தா போக்குவரத்துக் காவல்துறை. அஸ்வின் அவுட் செய்யும் புகைப்படத்துடன் போக்குவரத்து லைனை தாண்டும் கார் ஒன்றின்

புகைப்படத்தையும் இணைத்து, ‘ஆடுகளமோ, சாலையோ... எல்லை தாண்டினால் வருத்தப்படுவீர்கள்’ என்ற வாசகத்துடன் கொல்கத்தா போக் குவரத்து காவல்துறை ட்விட் செய்துள்ளது. இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com