அரசுமுறைப் பயணமாக டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்தியா - ரஷ்யா இடையிலான ராணுவ உறவை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் இந்த சந்திப்பின்போது இடம்பெறவிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கியை வாங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட எஸ்-400 ரக வான் பாதுகாப்பு தொகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெறவுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.