ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு: சமீர் வான்கடேவிடமிருந்து டெல்லி என்சிபிக்கு மாற்றம்

ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு: சமீர் வான்கடேவிடமிருந்து டெல்லி என்சிபிக்கு மாற்றம்
ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு: சமீர் வான்கடேவிடமிருந்து டெல்லி என்சிபிக்கு மாற்றம்

மும்பை போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு விசாரணை, சமீர் வான்கடேவின் மும்பை பிரிவில் இருந்து டெல்லி என்.சி.பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை போதைபொருள் தடுப்புப்பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் முத்தா அசோக் ஜெயின் தெரிவித்தார்சமீர் வான்கடே இந்த வழக்கை இனி கண்காணிக்க மாட்டார், ஆனால் மும்பை மண்டல இயக்குனராக இருப்பார் என ஜெயின் கூறினார்.

மும்பை கப்பல் போதைப்பொருள் வழக்கின் விசாரணையில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சமீர் வான்கடே, "நான் விசாரணையில் இருந்து நீக்கப்படவில்லை, டெல்லிக்கு மாற்ற மனு தாக்கல் செய்தேன். இந்த விவகாரத்தை ஒரு மத்திய நிறுவனம் விசாரிக்கிறது, இது டெல்லி மற்றும் மும்பையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு குழுக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com