உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு
Published on

பாலியல் புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பேசியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த வாரத்தில் சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதாகவும், அதனை தடுக்கும் முயற்சியாக இந்த புகாரை பார்ப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் நீதித்துறை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது எனவும் இதேநிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித்துறைக்கு வேலைக்கு வருவதற்கு தயங்குவார்கள் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதித்துறையின் பக்கம் நிற்க வேண்டிய நேரமிது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எந்தவொரு நீதிபதியும் தீர்ப்பை வழங்கும்போதோ அல்லது அவரின் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தோ விமர்சனங்கள் எழுவது வழக்கம். ஆனால் அதனையெல்லாம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நெறியுடன் சிறப்பான முறையிலேயே கையாண்டுள்ளார்.” என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 4 பேர் முன்னெப்போதும் இல்லாத வகையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களில் ஒருவர்தான் ரஞ்சன் கோகாய். அப்போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com