செல்போன் பயன்படுத்திய அர்னாப் - தலோஜா சிறைக்கு மாற்றிய காவல்துறை.!

செல்போன் பயன்படுத்திய அர்னாப் - தலோஜா சிறைக்கு மாற்றிய காவல்துறை.!
செல்போன் பயன்படுத்திய அர்னாப் -  தலோஜா சிறைக்கு மாற்றிய காவல்துறை.!

தனிஅறை காவலில் அர்னாப் கோஸ்வாமி செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி அவரை காவலர்கள் தலோஜா சிறைக்கு மாற்றியுள்ளனர்.

உள்கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். அவரது வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் அவரை 14 காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. அவரை காவலர்கள் தனிஅறை ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் அவர் அங்கு செல்போன் உபயோகித்ததாகக் கூறி அவரை காவலர்கள் தலோஜா சிறைக்கு மாற்றியுள்ளனர்.

இது குறித்து காவல் அதிகாரி ஜமீல்ஷேக் கூறும் போது “ கடந்த வெள்ளிக்கிழமை மாலை அர்னாப் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதை கண்டறிந்தோம். கடந்த புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்ட நிலையில் அவருக்கு யாரோ செல்போனை கொடுத்துள்ளனர்.  இது குறித்து அலிபாக் சிறை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு தனி சிறையில் இருக்கும் ஒரு கைதிக்கு எப்படி செல்போன் கிடைத்தது என்பது குறித்தான அறிக்கையை சமர்பிக்க சொல்லியுள்ளேன். இந்நிலையில்  இன்று காலை அவர் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, தான் ஆபத்தில் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அர்னாப் கத்தியதாகவும், இதனை தொடர்ந்து அவரை காவல் அதிகாரி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com