ஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகள், 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகள், 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகள், 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு
Published on

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 தீவிரவாதிகளும், மூன்று ராணுவப் பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஹிஸ்புல் முஜாகுதீன் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கடந்த 12 நாள்களில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் அப்பாவி பொது மக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் அனைத்தும் தெற்கு காஷ்மீர் பகுதியில் நிகழ்ந்தது. எனவே அந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை சனிக்கிழமை காலை தொடங்கியது" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் காலியா, "எல்லையில் மிகவும் மோசமான வானிலை நிலவும் போதிலும், இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 தீவிரவாதிகளும், 3 ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். மேலும் 2 ராணுவ வீரர்களுக்குக் காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாகுதின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முகாமிட்டதையடுத்து, இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தெரியும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com