இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை: சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்

இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை: சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்

இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை: சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்
Published on

இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் (சிஏஜி)  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் வந்தால் 10 நாட்களுக்குதான் அவை போதுமானதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிக்கிம் எல்லையில் சீனாவுடன் போர் சூழல் நிலவியுள்ள நிலையில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கணக்கு தணிக்கைக் குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ராணுவத்தில் நிலவும் ஆயுதப் பற்றாக்குறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதப்பற்றாக்குறை பிரச்சினை ஏற்கனவே நீடித்து வருகிறது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தாலும் இன்னும் பற்றாக்குறை உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியுள்ளது.

2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், 50 சதவீத ஆயுதங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, 170 வகையான ஆயுதங்களில் 85 ஆயுதங்கள், போர் நடந்தால், 10 நாட்களுக்குள்ளாகத் தீர்ந்துவிடும் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
2016 செப்டம்பர் நிலவரப்படி ராணுவத்தில் 40 சதவீத ஆயுதப் பற்றாக்குறை உள்ளதாக, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மொத்தமுள்ள 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்கள், போர் ஏற்பட்டால் 10 நாட்களுக்கு தாங்காது என்றும் இது கவலைக்குரிய விஷயம் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதப் பற்றாக்குறை காரணமாக ராணுவப் பயிற்சியின் கால அளவு குறைக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com