\
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on

பிகாில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் மருந்து ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் குவிந்து வந்தன. இதன்பேரில், அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜிதேந்திர குமார் கடந்த 2011-ம் ஆண்டு மருந்து ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். தற்போது பாட்னாவில் அவர் ஒரு பார்மசி கல்லூரியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com