"முதல்வர் நிதிஷ் குமாரை காணவில்லை"- பீகாரில் சுவரொட்டி

"முதல்வர் நிதிஷ் குமாரை காணவில்லை"- பீகாரில் சுவரொட்டி
"முதல்வர் நிதிஷ் குமாரை காணவில்லை"- பீகாரில் சுவரொட்டி

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை காணவில்லை என பாட்னாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்கள் குறித்து எந்த நிலைபாட்டையும் வெளிப்படுத்தாமல் நிதிஷ் குமார் மவுனம் காப்பதால் பாட்னாவில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

அதில் காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் கண் தெரியாத பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமாரை காணவில்லை என்று சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com