ஆந்திராவில் ரிலையன்ஸ் உடன் இணைந்து வில்லேஜ் மால்களாக மாறும் ரேஷன் கடைகள்

ஆந்திராவில் ரிலையன்ஸ் உடன் இணைந்து வில்லேஜ் மால்களாக மாறும் ரேஷன் கடைகள்

ஆந்திராவில் ரிலையன்ஸ் உடன் இணைந்து வில்லேஜ் மால்களாக மாறும் ரேஷன் கடைகள்
Published on

ஆந்திராவில் ரேஷன் கடைகள் வில்லேஜ் மால் என்ற பெயரில் விரிவாக்கப்பட உள்ளன என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ரிலையன்ஸ் ரீட்டெயில் மற்றும் ஃப்யூச்சர் குரூப் நிறுவனங்களுடன் இணைந்து, ரேஷன் கடைகளை வில்லேஜ் மால்களாக மாற்ற ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவையும் விற்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல் கட்டமாக 6500 வில்லேஜ் மால்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் பொருட்களை விற்க்கும் வியாபாரிகளுக்கு முதலீட்டில் 25 சதவீதத்தை மாநில அரசும், அடுத்ததாக 25 சதவீதம் மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள், நேரடியாக விவசாயிகளிடமிருந்து விவசாய பொருட்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் கிரிஜன் கூட்டுறவு திட்டத்தின் கீழ் பழங்குடி மக்கள் தயாரிக்கும் பொருட்களையும் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com