ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு

ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு

ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.

1984-ஆம் வருட இந்திய ரயில்வே பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த லஹோடி, மத்திய, வடக்கு, மத்திய வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மேற்கு ரயில்வேகளிலும், ரயில்வே வாரியத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.

மேற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக அவர் பதவி வகித்த போது அதிக சரக்குகளை கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்ததோடு, அதிக எண்ணிக்கையிலான விவசாய ரயில்களும் இயக்கப்பட்டன. சமீபத்தில் மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக  அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com