ஆந்திரா: கன மழையால் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

ஆந்திரா: கன மழையால் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
ஆந்திரா: கன மழையால் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

ஆந்திராவில் பழமையான கட்டடம் சரிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கட்டுமான இடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி பஜார் நகரில், பழமையான கட்டடம் இருந்தது. இந்த கட்டடம் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் சரிந்து பக்கத்தில் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டு கதிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com