சந்திரபாபு நாயுடுவுக்கு மறுப்பு தெரிவித்த ஜெகன்! ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிப்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு மறுப்பு தெரிவித்த ஜெகன்! ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிப்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு மறுப்பு தெரிவித்த ஜெகன்! ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிப்பு
Published on

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டதையடுத்து பிரஜா வேதிகா கட்டடம் இடிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார். 

இதையடுத்து தான் ஆட்சியில் இருக்கும்போதே அந்த வீட்டின் அருகில் சுமார் 5 கோடி செலவில் பிரஜா வேதிகா என்ற மற்றுமொரு புதிய கட்டடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டடம் கட்டும்போதே ஆபத்தான நதிக்கரைக்கு அருகில் கட்டுவதாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பிரஜா வேதிகா கட்டடத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஜெகன் மோகன் ரெட்டி அரசு நிராகரித்ததாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் முதன்முதலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பிரஜா வேதிகா கட்டடத்தில் தான் நடைபெற்றது. 

அப்போது, பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன் உத்தரவிட்டார். அதன்படி இன்று கட்டடம் இடிக்கும் பணி தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com