தேசியக் கொடியை அழித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வண்ணம் பூச்சு

தேசியக் கொடியை அழித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வண்ணம் பூச்சு
தேசியக் கொடியை அழித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வண்ணம் பூச்சு

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் ஆளும் கட்சி கொடியின் வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் பச்சை, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணம் பூச வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் அம்மாநில அரசு சார்பில் உத்தரவு பிறக்கப்பட்டது. இந்த வண்ணம் ஆந்திராவில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கொடியின் வண்ணமாகும். 

இந்த உத்தரவையடுத்து தற்போது அனைத்து பஞ்சாயத்து அலுவலங்களுக்கும் பச்சை, நீலம், வெள்ளை வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தம்மடாபல்லி என்ற பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து அலுவலகத்திலும் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது. அத்துடன் அலுவலகத்தின் சுவரில் இருந்த தேசியக் கொடியின் மீதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com