`வை ராஜா வை’ பாணியில் முன்னாள், இந்நாள் முதல்வர்களின் படத்தை பயன்படுத்தி சூதாட்டம்!

`வை ராஜா வை’ பாணியில் முன்னாள், இந்நாள் முதல்வர்களின் படத்தை பயன்படுத்தி சூதாட்டம்!
`வை ராஜா வை’ பாணியில் முன்னாள், இந்நாள் முதல்வர்களின் படத்தை பயன்படுத்தி சூதாட்டம்!

சேவல் சண்டை மைதானத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இந்நாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியேரின் படத்தை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சட்டராய் கிராமத்தில் சேவல் சண்டைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் இந்நாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் படத்தை பயன்படுத்தி ஒருவர், `வை ராஜா வை’ என்ற ரீதியில் சூதாட்டம் நடத்தியுள்ளார்.

இந்த சூதாட்டத்தில் சந்திரபாபு நாயுடுவை தலைவராக கொண்ட தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள், ஜெகன்மோகன் ரெட்டியை தலைவராகக் கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் யாரும் `எங்கள் தலைவரின் படத்தை ஏன் இப்படி பயன்படுத்துகிறாய்’ என்று கேட்கவில்லை. போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேற்கொண்டு இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com