ஆந்திரா: கொரோனாவுக்கு அஞ்சி 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்ட குடும்பம்

ஆந்திரா: கொரோனாவுக்கு அஞ்சி 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்ட குடும்பம்
ஆந்திரா: கொரோனாவுக்கு அஞ்சி 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்ட குடும்பம்
ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு பயந்து, வெளியுலக தொடர்பை துண்டித்த ஒரு குடும்பம், தங்களை கடந்த 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடாலி என்ற கிராமத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, ருத்தம்மா (50), காந்தமணி (32), ராணி (30) ஆகியோர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் ருத்தம்மாவின் கணவர் வெளியேச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு எவரிடமும் தொடர்பு கொள்ளாமல் கதவை அடைத்துக் கொள்வார்களாம். 
அண்மையில் முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ருத்தம்மாவுக்கு வீட்டுமனை பட்டா கொடுப்பதற்காக கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் இவர்கள் வீட்டை அணுகியிருக்கிறார்கள். அப்போதும் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது என உறுதியாக கூறிவிட்டனர். இவர்கள் வீட்டுக்குள் இவ்வாறு அடைபட்டுக் கிடப்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிகாரிகளிடம் கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்துக்கு, சுகாதாரத் துறையினரையும் அழைத்துக்கொண்டு வந்தனர். போலீசார் வந்து கூறியும் குடும்பத்தினர் கேட்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கொரோனா பயத்தால் வீட்டுக்குள்ளேயே ஒன்றரை ஆண்டுகளாக முடங்கியதால் பெண்கள் மூவரும் மிகவும் மெலிந்த நிலையில் உடல் நலிவுற்று இருந்திருக்கிறார்கள். உடனடியாக அவர்களை மீட்டு காக்கி நாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கி வருகிறார்கள். வெளியுலக தொடர்பை துண்டித்து, 15 மாதங்களாக நான்கு சுவற்றுக்குள் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com