கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடாலி என்ற கிராமத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, ருத்தம்மா (50), காந்தமணி (32), ராணி (30) ஆகியோர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் ருத்தம்மாவின் கணவர் வெளியேச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு எவரிடமும் தொடர்பு கொள்ளாமல் கதவை அடைத்துக் கொள்வார்களாம்.