அப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். -  அதிகாரம் திரும்புகிறதா?

அப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். -  அதிகாரம் திரும்புகிறதா?

அப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். -  அதிகாரம் திரும்புகிறதா?
Published on

2010ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அமித்ஷா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே சூழல் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

2005 ஆம் ஆண்டில் சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக குஜராத் காவல்துறை தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதி என்பவரும் 2006ஆம் ஆண்டில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இரண்டும் போலி என்கவுன்ட்டர் என்றும், அதில், குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து, 2010ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அமித்ஷா கைது செய்யப்பட்டார். அதனால் பதவியை ராஜினாமா செய்த அமித்ஷா, மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். தற்போது இந்தச் சூழல் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. தற்போது அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com