"முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன், திருப்தியுடன் செல்கிறேன்" - தலைமை நீதிபதி பாப்டே

"முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன், திருப்தியுடன் செல்கிறேன்" - தலைமை நீதிபதி பாப்டே
"முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன், திருப்தியுடன் செல்கிறேன்" - தலைமை நீதிபதி பாப்டே

தம்மால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டதாகவும், திருப்தியுடன் செல்வதாகவும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக, சரத் அரவிந்த் பாப்டே, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இன்று ஓய்வுபெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் பேசிய பாப்டே கொரோனா காலத்தில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெற்றாலும் அதில் உள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும் என்றார்.

தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டதாகவும், திருப்தியுடன் செல்வதாகவும் பாப்டே கூறினார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை பூர்வீகமாகக் கொண்ட பாப்டே பல்வேறு நீதிமன்றங்களில் 21 ஆண்டுகள் நீதிபதிகளாக பணியாற்றியுள்ளார். பாப்டே ஓய்வுபெற்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா, நாளை பதவியேற்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com