கடந்த ஆண்டு டிசம்பரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, கோரக்பூரை சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் மீது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் மருத்துவர் கஃபீல்கான் அடைக்கப்பட்டுள்ளார்.