துப்பாக்கிச் சுடுதல் போட்டி: கோட்னிஸ் ஐபிஎஸ் 2ம் பரிசு

துப்பாக்கிச் சுடுதல் போட்டி: கோட்னிஸ் ஐபிஎஸ் 2ம் பரிசு

துப்பாக்கிச் சுடுதல் போட்டி: கோட்னிஸ் ஐபிஎஸ் 2ம் பரிசு
Published on

காவல்துறையினருக்காக அசாமில் நடைப்பெற்ற அகில இந்திய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் கோட்னிஸ் ஐபிஎஸ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

காவல்துறையினருக்கான அகில இந்திய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்படை, தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட காவல்துறை அதிகாரி கோட்னிஸ் ஐபிஎஸ் இதில் இரண்டாம் பரிசைப் பெற்றார். இவர் இப்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளார்.

அனைத்திந்திய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பரிசு வெல்வது இதுவே முதல் முறை. இந்திய அளவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வெல்வதும் இதுவே முதல் முறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com