ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்

ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்

ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்
Published on

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள்  எல்லாம் விரைவில் நீக்கப்படும் என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி கோவிலின் அறக்கட்டளை தலைவர் நித்திய கோபால் தாஸின் 81வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கலந்து கொண்டார். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பேசிய ஆதித்யநாத் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள்  எல்லாம் விரைவில் நீக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர் ''இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றிருக்கிறார். இது ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை நீக்கும். அயோத்திக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக அங்கீகாரம் அளித்துள்ளார். பாஜக ஆட்சியை இரண்டாவது முறையாக தொடர உதவிய அயோத்தி சகாக்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. 

கடந்த 5 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் இந்தியாவுக்கு சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினமாக உலக நாடுகள் கொண்டாட உள்ளன. கும்பமேளா விழாவை  மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க கலாச்சார பாரம்பரியத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது'' என்று தெரிவித்தார்

மேலும் ''நாடு சக்திவாய்ந்ததாக இருந்தால் தான் நாம் ஒற்றுமையையும், சமாதானத்தையும் உறுதி செய்ய முடியும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நம் நாட்டை சக்திவாய்ந்ததாக வைத்துள்ளது'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com