ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!
Published on

ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ளது புகழ்பெற்ற மெக்கா மசூதி. கடந்த 2007-ம் ஆண்டு இந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் சவுத்ரி உட்பட 8 பேர் இவ்வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தண்டனையை நீதிமன்றம் இன்று வழங்கியது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். பின்னர் உரிய ஆதாரங்கள் இல்லாததால் 5 பேரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

(அசீமானந்த்)

மற்ற 3 குற்றவாளிகளில், சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி. டாங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்ரா இரண்டு பேரும் தப்பி வருகின்றனர். அவர்களை இன்னும் பிடிக்க முடியவில்லை. 
 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com